
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கிவுள்ளது.
இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று திருவனந்தபுரம் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணி 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பரிசளிப்பு விழாவின் போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு பதிலாக அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக் வந்து தோல்விக்கான காரணத்தை பகிர்ந்து கொண்டார்.