Advertisement

வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி கிடையாது - சௌரவ் கங்குலி!

தற்போதைய கூட்டணி இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி என்று சொல்ல முடியாது என முன்னாள் கேப்டன் சௌரவ் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 11, 2023 • 17:21 PM
வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி கிடையாது - சௌரவ் கங்குலி!
வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி கிடையாது - சௌரவ் கங்குலி! (Image Source: Google)
Advertisement

நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறது.

சொல்லப்போனால் இந்த வெற்றிகளில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பும்ரா, சிராஜ், ஷமி, ஜடேஜா, குல்தீப் ஆகிய பவுலர்கள் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை 199 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெறுவதற்கு பங்காற்றிய அவர்கள் நியூசிலாந்துக்கு எதிராகவும் 400 ரன்களை தொடவிடாமல் வெற்றி பெற வைத்தனர்.

Trending


குறிப்பாக ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்துகளில் எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறார்கள். இதனால் இந்தியாவின் பவுலிங் இரக்கமற்றதாக மாறியுள்ளதாக சோயப் அக்தர் பாராட்டிய நிலையில் பாகிஸ்தானை விட இந்திய பவுலிங் உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதாக வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய கூட்டணி இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி என்று சொல்ல முடியாது என முன்னாள் கேப்டன் சௌரவ் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இன்றைய தேதி வரை இது தான் இந்தியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சு அட்டாக் என்று நான் சொல்ல மாட்டேன். 2003 உலக கோப்பையில் ஆசிஸ் நெஹ்ரா, ஜாகிர் கான், ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோரும் அபாரமாக பந்து வீசினார்கள்.

ஆனால் ஆம் சிராஜ், ஷமி, பும்ரா ஆகியோர் பந்து வீசுவதை பார்ப்பது ஆர்வமாக இருக்கிறது. குறிப்பாக பும்ரா இருக்கும் போது நீங்கள் பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியும். அதனால் இருபுறமும் அழுத்தம் ஏற்படும் என்பதால் 2 பவுலர்கள் ஜோடியாக விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதில் பும்ரா சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அதே போல ஷமி இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே அணியில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை தற்போது பாருங்கள்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement