போட்டிகளை வெல்ல கேட்சுகளைப் பிடிப்பது அவசியம் - சஞ்சு சாம்சன்!
அவர்கள் எங்கள் கேட்சுகளையும் தவறவிட்டார்கள், நாங்களும் அவர்களின் கேட்சுகளையும் தவறவிட்டோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய 4ஆவது வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த மைதானத்தில் 170 ரன்கள் என்பது எளிதான ஸ்கோர்தான். பகலில் நடைபெறும் போட்டிகளில் இதுபோன்ற விக்கெட்டை நீங்கள் முதலில் பேட்டிங் செய்வது சற்று கடினமான விசயமாகும். ஏனெனில் டாஸை இழந்து பேட்டிங் செய்யும் போது முதல் 10 ஓவர்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன்.
Trending
மேற்கொண்டு எதிரணி எங்களுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனாலும் பவர்பிளேயில் அவர்கள் ஆட்டத்தை வென்றார்கள் என்று நினைக்கிறேன். கேட்சுகள் போட்டிகளை வெல்லும். அவர்கள் எங்கள் கேட்சுகளையும் தவறவிட்டார்கள், நாங்களும் அவர்களின் கேட்சுகளையும் தவறவிட்டோம். அதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் நாங்கள் ஃபீல்டிங்கில் முன்னேறே வேண்டியது அவசியமாகும்.
மேற்கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் பந்து பேட்டிங் செய்ய சிறப்பாக வந்தது. அவர்கள் மிகவும் நன்றான தொடக்கத்தையும் பெற்றிருந்தனர். இங்கு அவர்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடிவுள்ளனர். நாங்கள் முன்னேற்றம் மற்றும் வலுவாக திரும்புவது பற்றி நிச்சயம் அனைவரிடமும் உரையாட வேண்டும். அதனால் அடுத்த போட்டிக்கு முன்னதாக இந்த எண்ணங்களை விட்டுவிட்டு நேர்மறையாக திரும்ப வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், ரியான் பராக் 30 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 75 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை மட்டுமே சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் அதிரடியாக விளையாடி 65 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 40 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now