Advertisement

இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் - ரவி சாஸ்திரி!

தற்போது இருக்கும் ஃபார்மில் இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார்.

Advertisement
இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் - ரவி சாஸ்திரி!
இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் - ரவி சாஸ்திரி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 08, 2025 • 11:39 AM

பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை (மார்ச் 09) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 08, 2025 • 11:39 AM

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் இந்திய அணி ஏற்கெனவே கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பை நழுவவிட்டதால், இம்முறை கோப்பையை வென்று அசத்துமா அல்லது கடந்த 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி இம்முறை மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Trending

இந்நிலையில், தற்போது இருக்கும் ஃபார்மில் இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்தியாவை வெல்லக்கூடிய ஒரு அணி இருந்தால், அது நியூசிலாந்து தான். எனவே இப்போட்டியில் இந்திய அணி அனைவரின் விருப்பமாக இருந்தாலும், நியூசிலாந்தை எளிதாக எண்ண வேண்டாம். 

மேலும் இப்போட்டியின் ஆட்ட நாயகனாக நான் ஒரு ஆல்ரவுண்டரைத் தேர்ந்தெடுப்பேன். நான் இந்தியாவைச் சேர்ந்த அக்ஸ்ர் படேல் அல்லது ரவீந்திர ஜடேஜா என்று சொல்வேன். அதேசமயம் நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸுக்கு அந்த வாய்ப்பானது உள்ளது.  இப்போட்டியில் அவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடும். அவர்கள் பேட்டிங்கில் 40, 50 ரன்களை எடுத்து ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடும்.

ஆடுகளத்தைப் பொறுத்து இரு அணிகளின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் பார்த்த ஆடுகளம்தான் இந்த தொடரில் நாங்கள் பார்த்த சிறந்த ஆடுகளம் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஐசிசி தொடர்களில் இவ்விரு அணிகளும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இப்போட்டியில் எந்த அணி மகுடம் சூடும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்தியா - நியூசிலாந்து அணிகள்

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர். 

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து அணி: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், ஜேக்கப் டஃபி, டெவன் கான்வே, மார்க் சாப்மேன், நாதன் ஸ்மித்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement