
தென் ஆப்பிரிக்கா மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்திய அணியின் கனவு மீண்டும் தகர்ந்துள்ளது.
முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் அடித்த அதே பிட்ச்சில் இந்தியா 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான தோல்வியை சந்தித்தது. இதில் ஜெய்ஸ்வால், கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களும் அவர்களை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.
உதனால் இந்த தோல்விக்கு அஜிங்கிய ரஹானே மற்றும் செட்டேஷ்வர் புஜாரா ஆகிய சீனியர்கள் இல்லாததே முக்கிய காரணம் என்று ஹர்பஜன் சிங் சமீபத்தில் விமர்சித்திருந்தார். மேலும் ரஹானே, புஜராவுக்கு சமமான அனுபவமிகுந்த வீரர்கள் இந்திய அணியில் இல்லை என்று தெரிவித்த ஹர்பஜன் ஒருவேளை அவர்கள் இருந்திருந்தால் இந்த போட்டியில் இந்தியா மோசமாக தோற்றிருக்காது என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
No rest days pic.twitter.com/EM218MqMhK
— Ajinkya Rahane (@ajinkyarahane88) December 29, 2023