-mdl.jpg)
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து புஜாரா தற்போது அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த புஜாரா தற்போது கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார்.
கடந்துமுறையே புஜாரா இங்கிலாந்தில் விளையாடிவிட்டு தான் செம qபார்மில் இருந்தார். இதேபோன்று தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் புஜாரா தன்னுடைய திறமையை வெளிப்படுத்திருக்கிறார்.
டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாரா சசெக்ஸ் அணிக்காக இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கினார். இதில் டாஸ் வென்ற சசெக்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர் டாம் 6 ரன்களிலும் ஹெனீஸ் 13 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். மூன்றாவது வீரராக களத்திற்கு வந்த புஜாரா நிதானமாக ரன்களை சேர்த்தார்.