
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் என்று 543 ரன்களை விளாசியுள்ளார். நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி சச்சினின் சாதனையையும் முறியடித்து அசத்தினார்.
ஆடுகளங்களுக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப விளையாடுவதில் விராட் கோலி கில்லியாக செயல்பட்டு வருவது சர்வதேச ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. 3 ஆண்டுகளாக ஃபார்மின்றி தவித்த விராட் கோலியால் மீண்டு வர முடியாது என்று சில மாதங்களுக்கு விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் விராட் கோலி உச்சத்திற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், “சமகாலத்தில் விராட் கோலி தான் மிகச்சிறந்த வீரர் என்பதை நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். தற்போது அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரின் ஜாம்பவான் வீரர் என்பதை நிரூபிக்க சச்சினின் சாதனைகளை எல்லாம் முறியடிக்க தேவையில்லை. அவரது பேட்டில் இருந்து விளாசப்பட்ட ரன்களை பார்த்தாலே போதுமானது.