
‘Closed my eyes, asked myself, ‘is this a dream?’': Suryakumar Yadav (Image Source: Google)
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா டி20 தொடரில் விளையாடவில்லை.
இதனால் இந்திய டி20 அணிக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துணை கேப்டன் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டத்து குறித்து பேசிய சூர்ய குமார் யாதவ், “துணை கேப்டன் பதவியை எதிர்பார்க்கவில்லை. நான் கண்களை மூடிக்கொண்டு என்னை நானே கேட்டு கொண்டேன் இது கனவா என்று. இதை இன்னும் கனவு போல் உணர்கிறேன். அணி அறிவிக்கப்பட்டதும் என் தந்தை எனக்கு அந்த செய்தியை அனுப்பினார்.