
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த பாகிஸ்தானை இன்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு துபாயில் எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாலும் தற்போது பாகிஸ்தான் அசுர பலத்தில் உள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “எங்களுடைய கவனம் எல்லாம் பாகிஸ்தான் போட்டியில் மீது தான் இருக்கிறது. எங்கள் அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் வீரர்கள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் எப்படி விளையாடுகிறோமோ அப்படித்தான் பாகிஸ்தான் போட்டியையும் எதிர்கொள்கிறோம். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நஷிம் ஷா சிறப்பாக செயல்படுகிறார்.