
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த 26ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஃபார்ம் அவுட் எனக்கூறப்பட்ட ரகானே, உமேஷ் யாதவ் என பல முன்னணி வீரர்கள் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளனர்.
இதில் மிகவும் முக்கியமான ஒருவர் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தான். டெல்லி அணிக்காக விளையாடும் அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இவர் விக்கெட் எடுத்தவுடன் ரசிகர்கள் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டனர். இதற்கு காரணம் கடந்த 2 சீசன்களாக அவர் புறக்கணிக்கப்பட்டது தான்.
கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த குல்தீப் யாதவுக்கு கடந்த 2 சீசன்களில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்ற காரணத்தை கூட அணி நிர்வாகமும் கேப்டனும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதனால் இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் போன குல்தீப் யாதவ், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரூ.2 கோடிக்கு தான் ஏலம் போனார்.