
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைஅதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எதிரணியின் பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுதடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் இப்போட்டியில் ஆஸ்திரேலிய 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக சீன் அபோட் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரி ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்துல்லா ஷஃபிக் 37 ரன்களுக்கும், சைம் அயூப் 42 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர்.