Advertisement
Advertisement
Advertisement

அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த ரோவ்மன் பாவெல் - வைரல் காணொளி!

வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல்ஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த ரோவ்மன் பாவெல் - வைரல் காணொளி!
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த ரோவ்மன் பாவெல் - வைரல் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 26, 2024 • 01:12 PM

கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27அவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 26, 2024 • 01:12 PM

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கயானா அணியில் ஷாய் ஹோப் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் ஆகியோரது அதிரடியன ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்களையும் , ஷிம்ரான் ஹெட்மையர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களையும் சேர்த்தனர். ராயல்ஸ் தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Trending

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 35 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

கயானா அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, கேப்டன் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 47 ரன்கள் வித்தியாசத்தில் பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் ராயல்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

 

Also Read: Funding To Save Test Cricket

அந்தவகையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய ஷிம்ரான் ஹெட்மையர் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேசவ் மஹாராஜ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார். ஆனால் அந்த பந்தில் போதிய வேகம் இல்லாத காரணத்தால் உயரச்செல்ல, அதனை சரியாக கணித்த ரோவ்மன் பாவேல் அபாரமான டைவை அடித்து கேட்ச் பிடித்து அசத்தினார். இந்நிலையில் ரோவ்மன் பாவெல் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement