Advertisement
Advertisement
Advertisement

பாலியல் வழக்கில் சிக்கிய லமிச்சானே மீதான தடை நீக்கம் - தகவல்!

பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சந்தீப் லமீச்சானே மீது விதித்த தடையை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 01, 2023 • 12:11 PM
Cricket Association of Nepal lifts suspension of rape accused start cricketer!
Cricket Association of Nepal lifts suspension of rape accused start cricketer! (Image Source: Google)
Advertisement

நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் சந்தீப் லமிச்சானே. சுழற்பந்து வீச்சாளராக சிறப்புடன் விளையாடிய சந்தீப் மீது கவுசாலா காவல் துறையிடம் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி பாலியல் வன்கொடுமை புகார் கூறினார்.

கடந்த ஆகஸ்டு 21ஆம் தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புகார் அளித்த 2 நாட்களுக்கு பின் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே நாளில் அவரை நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. 

Trending


இதன்பின், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்தீப், உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர்.

இந்நிலையில், நேபாள கிரிக்கெட் கூட்டமைப்பின் கூட்டம் பொக்காரா நகரில் நேற்று இரவு நடந்தது. இதில், சந்தீப் லமிச்சானே மீது பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குவது என முடிவானது. அதுபற்றி இன்று முடிவு அறிவிக்கப்படும் என கூட்டமைப்பு அதிகாரி பிரேந்திரா பகதூர் சந்தா கூறியுள்ளார்.

இந்த சூழலில், சந்தீப்பை ஜாமீனில் விடுவது என்ற பதான் ஐகோர்ட்டு முடிவுக்கு எதிராக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவானது. அரசு வழக்கறிஞர் சார்பில் தாக்கலான மனுவில், பாலியல் வன்கொடுமை குற்றவாளியான கிரிக்கெட் வீரர் சந்தீப் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement