ஐபிஎல் 2025: தென் ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளும் மே 17 முதல் ஜூன் 03ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தேர்வுசெய்யப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்க அணியில் 8 வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
அந்தவகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் கார்பின் போஷ் (மும்பை இந்தியன்ஸ்), வியான் முல்டர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), மார்கோ ஜான்சன் (பஞ்சாப் கிங்ஸ்), ஐடன் மார்க்ராம் (லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ்), லுங்கி இங்கிடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), ககிசோ ரபாடா (குஜராத் டைட்டன்ஸ்), ரியான் ரிகெல்டன் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு வெளியேறிவுள்ள நிலையில், மற்ற அணிகளில் உள்ள வீரர்கள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மே 31 ஆம் தேதிக்குள் இங்கிலாந்தின் அருண்டேலில் கூடுமாறு கேட்டுக் தென் ஆப்பிரிக்க தரப்பில் கொள்ளப்பட்டுள்ளனர். பின்னர் அணி ஜூன் 3 முதல் 6 வரை ஜிம்பாப்வேக்கு எதிராக பயிற்சிப் போட்டிகளில் விளையாடி பின்னர் லண்டன் செல்லவுள்ளது.
இதுகுறித்து பேசிய தென் ஆப்பிரிக்காவின் புதிய தலைமை பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட், "ஐபிஎல் மற்றும் பிசிசிஐ உடனான ஆரம்ப ஒப்பந்தம் என்னவென்றால், இறுதிப் போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறும், எங்கள் வீரர்கள் 26 ஆம் தேதி திரும்பி வருவார்கள், 30 ஆம் தேதி நாங்கள் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்பது தான். ஆனால் எங்கள் பார்வையில் இருந்து எதுவும் மாறவில்லை.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் இயக்குனர் மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அகியோர் இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், தற்போதுள்ள நிலையில், நாங்கள் இதில் பின்வாங்கப் போவதில்லை என்று நினைக்கிறேன். எங்கள் வீரர்கள் மெ26 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அது நடக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று கூறிவுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 8 வீரர்களைத் தவிர, மற்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள் டெவால்ட் பிரெவிஸ் (சிஎஸ்கே), ஃபாஃப் டு பிளெசிஸ், டோனோவன் ஃபெரீரா (டிசி), ஜெரால்ட் கோட்ஸி (ஜிடி), குயின்டன் டி காக், அன்ரிக் நோர்ட்ஜே (கேகேஆர்), டேவிட் மில்லர், மேத்யூ பிரீட்ஸ்கே (எல்எஸ்ஜி), நந்த்ரே பர்கர், குவேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் (ஆர்ஆர்), ஹென்ரிச் கிளாசென் (எஸ்ஆர்எச்) ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now