
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு வாரங்களாக சூரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி, மீண்டும் பழைய வீரர்களைதான் வாங்க முயற்சி செய்தது. அதன்படி அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், தீபக் சஹார் போன்றவர்களை வாங்கியது. இருப்பினும், ஷர்தூல் தாகூர் போன்ற சிலரை வாங்க முடியவில்லை.
இதனால், புது லெவனை அணியை கட்டமைக்க வேண்டிய இடத்தில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி, தலைமை பயிற்சியாளர்கள் ஸ்டீபன் பிளெமிங், பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் இருக்கிறார்கள். இதனால், பயிற்சியில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்காணித்து, அவர்களில் சிறப்பாக செயல்படுவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்கு லெவன் அணியில் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.