
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி, ஒரு விக்கெட் கீப்பராக, மகேந்திர சிங் தோனி ஐபிஎல்லில் 264 போட்டிகளில் 257 இன்னிங்ஸ்களில் 148 கேட்சுகளை எடுத்துள்ளார். மும்பைக்கு எதிராக அவர் இரண்டு கேட்சுகளைப் பிடித்தால், ஐபிஎல்லில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்சுகளைப் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெறுவார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகளைப் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் தோனி முதலிடத்தில் குறிப்பிடத்தக்கது.