
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 217 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள்.
இதில் ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுழற் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.இதில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமாக நோபால்களும் ஓயிடுகளும் வீசினார்கள்.
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு கருத்து தெரிவித்த கேப்டன் தோனி, “இன்றைய ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே ரன்களை வாரி குவித்தார்கள். முதலில் நாங்கள் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை யோசித்தோம். ஆனால் எங்களுக்கு முதல் போட்டியே சிறப்பாக அமைந்து விட்டது. 180 ரன்கள் அடித்தால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று அர்த்தம். ஆனால் இரண்டு அணிகளுமே 200க்கு மேல் அடிக்கும் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம். சேப்பாக்கம் ஆடுகளம் முதலில் தோய்வாக இருக்கும் என நினைத்தேன்.