Ipl 16
பிராவோவின் ரோலை சிறப்பாக செய்து முடிக்க காத்திருக்கிறேன் - துஷார் தேஷ்பாண்டே!
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையே நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 217 ரன்களை எடுத்தது . அந்த அணியின் போக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் 57 ரன்களும் கான்வே 47 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணியின் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 218 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் துவக்கம் மிகச் சிறப்பாக அமைந்தது. மேயர்ஸ் அதிரடியாக ஆடி 53 ரண்களில் ஆட்டம் இழந்தாலும் அவர் அமைத்துக் கொடுத்த சிறப்பான துவக்கத்தை முன்னெடுத்துச் செல்ல லக்னோ அணியினர் தவறி விட்டனர் . இதனால் அந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணியின் பந்து வீக்கில் மொயினளி சிறப்பாக வந்து வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார் .