Advertisement

CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 29, 2023 • 16:05 PM
CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்!
CWC 2023: இந்திய அணியின் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை கணித்த சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக தகுதிப்பொற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீப காலங்களில் அசைக்கமுடியா அணியாக சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தயாராக இருக்கிறது .

குறிப்பாக முக்கிய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ், பும்ரா போன்ற காயத்தை சந்தித்த வீரர்களும் முழுமையாக குணமடைந்து அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றனர். முன்னதாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகிய மூவருமே இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

Trending


அதனால் எதிரணியில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்ட தேர்வுக்குழு 2023 கோப்பையில் காயத்தை சந்தித்த அக்ஸர் படேலுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்தனர். அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய அஸ்வின் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதன் காரணமாக உலகக் கோப்பைக்கான இறுதிக்கட்ட அணியில் அக்ஸர் படேல் முழுமையாக குணமடையாத காரணத்தால் அவருக்கு பதிலாக கடைசி நேரத்தில் அஸ்வின் தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ள.  இந்நிலையில் 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்காற்றி சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்களை எடுத்து மிகப்பெரிய அனுபவம் கொண்ட அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா தம்முடைய முதல் உலகக்கோப்பை போட்டியில் களமிறங்க உள்ளது. இருப்பினும் பிறந்து வளர்ந்த சென்னை மண்ணில் நடைபெறும் அந்தப் போட்டிக்கான தம்முடைய 11 பேர் அணியில் 3 ஸ்பின்னர்கள் விளையாடினால் மட்டுமே அஸ்வின் இருப்பார் என்று தெரிவிக்கும் சுனில் கவாஸ்கர், தம்முடைய கருத்தையும் பதிவுசெய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது மைதானம் மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் 2 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் நீங்கள் தேர்வு செய்யலாம். ஏனெனில் உங்களிடம் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வின் நிச்சயமாக அணியில் இருப்பார்” என்று கூறியுள்ளார். 

சுனில் கவாஸ்கர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யதாவ், முகமது ஷமி/ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement