-mdl.jpg)
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 - 2 என இங்கிலாந்து அணி சமன் செய்தது.
இந்த போட்டியின் முதல் மூன்று நாட்களும் இந்திய அணியின் ஆதிக்கம் தான் செலுத்தியது. 4ஆவது நாள் பேட்டிங் மற்றும் 5ஆவது நாள் பந்துவீச்சு என இரண்டு நாட்களிலும் இந்திய அணி சொதப்பியது. இந்நிலையில் இந்தியாவின் இந்த சொதப்பலுக்கு என்ன காரணம் என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் டிராவிட் மீது பாகிஸ்தான் முன்னாள்வீரர் டேனிஷ் கனேரியா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது தான் எனக்கு புரியவில்லை. டிராவிட் எடுத்த இந்த முடிவு மிகவும் தவறானது.