முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - காணொளி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியாயனது 65 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டேவிட் வார்னர் மீண்டும் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறிவுள்ளார். அதன்படி இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக டேவிட் வார்னர் களமிறங்கிய நிலையில் லாகூர் அணி தரப்பில் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி வீசினார். அப்போது அந்த ஓவரின் இரண்டாவது பந்த ஷாஹீன் அஃப்ரிடி வைடராக வீசிய நிலையில், டேவிட் வார்னர் அதனை அடிக்க முயன்றார்.
Also Read
ஆனால் பந்து அவரது பேட்டின் எட்ஜில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதனால் இந்த போட்டியில் டேவிட் வார்னர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸும் அதே ஓவரின் 4ஆவது பந்தில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் டேவிட் வார்னரின் ஃபார்மானது கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் இந்த சீசனில் அவர் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளீலும் சேர்த்து மொத்தமாகவே 12 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதில் அவர் முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் 12 ரன்களை எடுத்ததை தவிர்த்து, இந்த போட்டியில் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்துள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணியில் ஃபகர் ஸமான் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், டேரில் மிட்செல் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 75 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்தது. கராச்சி கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி கிங்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷ்தீல் ஷா 39 ரன்களையும், ஹசன் அலி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now