
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை மீண்டும் இந்தியா எதிர்கொண்டு வரும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா முதலிரண்டு போட்டிகளில் வென்றது.
குறிப்பாக கேப்டன் சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், இஷான் கிஷான் ஆகியோர் முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலையும் பெற்று கொடுத்தனர். இந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் முக்கியமான 3ஆவது போட்டி இன்று கௌதாத்தியில் துவங்கியது.
இதில் கண்டிப்பாக வென்றால் தான் இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மறுபுறம் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் விளையாடுவார் என்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்தார்.