
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதை தொடர்ந்து கேஎல் ராகுல் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ரோஹித் சர்மா தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென் ஆப்பிரிக்கா அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து தீபக் சஹார் விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீப காலங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்து இந்தியாவுக்காக விளையாட தயாராக உள்ளார்.
இருப்பினும் தம்முடைய தந்தையின் உடல்நிலை திடீரென்று மோசமாக மாறியதால் நடைபெற்ற முடிந்த டி20 தொடரில் அவர் பாதியிலேயே வெளியேறினார். இந்த சூழ்நிலையில் தம்முடைய தந்தையின் உடல் நிலையை பார்ப்பதற்காக அனுமதி கொடுக்க வேண்டும் என்று தீபக் சஹார் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது அதை ஏற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ அவருக்கு இந்த ஒருநாள் தொடரிலிருந்து விடுப்பு கொடுப்பதாக அறிவித்துள்ளது.