Advertisement

தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு!

கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் 2 அதிகாரிகள் மீது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஞ்சியில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 05, 2024 • 20:04 PM
தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு!
தன்னை ஏமாற்றி 15 கோடி மோசடி செய்ததாக எம் எஸ் தோனி வழக்கு! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான், கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் அதிகாரிகள் இருவர் மீது கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் வழக்கு தொடர்ந்தார்.

ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தோனியுடன் திவாகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

Trending


ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒரு உரிமைக் கட்டணத்தைச் செலுத்தவும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறது. அவை மதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை இது குறித்து கேட்ட போதிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

நிபந்தனைகளுக்கு இணங்காததால் 2021 ஆகஸ்ட் 15 அன்று அர்கா ஸ்போர்ட்ஸுக்கு தோனி நோட்டீஸ் அனுப்பினார். அப்போது அர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமையும் ரத்து செய்யப்பட்டது. தோனி தனது தொழில் பங்குதாரர் திவாகருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதை அடுத்து ராஞ்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

விதி அசோசியேட்ஸ் மூலம் எம்எஸ் தோனி சார்பில் தயானந்த் சிங் என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதில், ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் ரூ.15 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement