
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில்மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா மற்றும் கருண் நாயர தலைமையிலான விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதரா நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கர்நாடகா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கர்நாடகா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. கர்நாடகா அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மறன் ரவிச்சந்திரன் 101 ரன்கள் குவித்தார். மேற்கொண்டு கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்களையும், அபினவ் மனோஹர் 79 ரன்களையும் சேர்த்தனர். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே, நாச்சிகேத் பூதே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய விதர்பா அணியில் யாஷ் ரத்தோட், கருண் நாயர் ஆகியோர் சோபிக்க தவறினர். மாற்றொரு தொடக்க வீரரான துருவ் ஷோரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் சதமடித்தும் அசத்தினார்.பின் 110 ரன்கள் எடுத்த நிலையில் துருவ் ஷோரே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஹர்ஷ் தூபே 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.