Advertisement

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை - ஆகாஷ் தீப்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 11, 2024 • 14:43 PM
இந்திய அணியில்  வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை - ஆகாஷ் தீப்!
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை - ஆகாஷ் தீப்! (Image Source: Google)
Advertisement

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயண் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி என 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ் கோட்டியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். மேலும் சமீப காலமாக தடுமாறி வரும் ஸ்ரேயாஸ் ஐயரும் இந்திட டெஸ்ட் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப்க்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Trending


முன்னதாக ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி கவணத்தை ஈர்த்த ஆகாஷ் தீப், இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கெதிராக விளையாடும் இந்திய ஏ அணியில் இடம்பிடித்தார். அதன்படி பயிற்சி டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆகாஷ் தீப் சிங்கிற்கு இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய ஆகாஷ் தீப், “நான் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரிலேயே எனக்கு அந்த வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் கிரிக்கெட் விளையாடிய சமயத்தில் என் சொந்த மாநிலமான பீகார் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐயால் தடை செய்யப்பட்டிருந்தது.

இதனால் எனது சொந்த மாநில அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது குற்றமாக பார்க்கப்பட்டது. அதனால் என்னுடன் மற்ற குழந்தைகள் சேரக்கூடாது என பெற்றோர்கள் நினைப்பார்கள். ஏனெனில் அவர்கள் கிரிக்கெட் விளைடுவதால் அவர்களின் படிப்பு கெட்டுவிடும் என நினைத்தார். நான் அவர்களை குறைசெல்லவில்லை. இதுபோன்ற இடத்தில் அவர்கள் கிரிக்கெட் விளையாடி என்ன சாதீப்பார்கள்? அதனால் அவர்கள் தங்களது நேரத்தை வீணடிப்பதுடன், படிப்பையும் இழந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement