
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் என டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தானர். அதன்பின் களமிறங்கிய அனிகெத் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதுசெய்ததுடன் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவருடன் இணைந்து விளையாட ஹென்ரிச் கிளாசென் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக அந்த அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 38 ரன்களையும், அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 50 ரன்களிலும், அடுத்து வந்த கேஎல் ராகுல் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.