
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இலங்கை அணி 210 ரன்கள் இலக்காக நிர்ணயிக்க அதனை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 51 பந்துகளை எதிர் கொண்டு 52 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் மிட்செல் மார்ஷ பேசினார். அப்போது கவாஸ்கரும் அருகில் இருந்தார். மிட்செல் மார்ஷின் தந்தையான ஜெஃப் மார்ஷ் கவாஸ்கர் உடன் விளையாடி இருக்கிறார். ஜெப் மார்ஷ் மெதுவாக விளையாடக்கூடிய வீரர். ஆனால் மிட்செல் மார்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார்.
இதனை கிண்டல் செய்யும் விதமாக கவாஸ்கர் மிட்செல் மார்ஷிடம் உன் தந்தை உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா என்று தடுப்பாட்டம் ஆடும் சைகையை கவாஸ்கர் செய்தார். தொடர்ந்து பேசிய கவாஸ்கர் ஏனென்றால் நீ தொடர்ந்து அதிரடியாக தான் விளையாடுகிறாய். அதனால் தான் நான் கேட்டேன் என்று கூறினார்.