
கேப்டன்களை மாற்றும் விவகாரத்தில் கங்கலியின் செயல்பாடு, சர்ச்சைக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது. விராட் கோலியை பிசிசிஐ அவமானப்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து கங்குலி ஒரு தன்னிலை விளக்கத்தை தந்தார். அதில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலியை மாற்றியது பிசிசிஐயும், தேர்வுக்குழுவும் சேர்ந்து எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.
டி20 போட்டிகளிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் பேசியதாக கங்குலி தெரிவித்தார். ஆனால், பிசிசிஐயிடமிருந்து அப்படி யாரும் என்னிடம் பேசவில்லை என்று கோலி கூறினார்.
இந்த நிலையில், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் தீலிப் வெங்சர்கார் கங்குலியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கங்குலியில் பணி பிசிசிஐ தலைவர் என்ற பொறுப்பு மட்டும் தான், தேர்வுக்குழுவின் பணியை கங்குலி பார்க்க தேவையில்லை என்று கூறினார்.