
இந்திய அணி அடுத்த இரண்டு மாதத்தில் குறைந்தபட்சம் பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகளில் மோதுவது உறுதியாகியிருக்கிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இந்தியா அதிகபட்சமாக ஐந்து முறை மோதலாம். பல ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேரடியான இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் விளையாடாமல் இருக்கின்ற நிலையில், ஒரே ஆண்டில் ஐந்து போட்டிகளில் மோதிக்கொள்வதற்கு வாய்ப்பு இருப்பது என்பது இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமான விஷயம்.
இந்த போட்டிகள் குறித்து இந்தியர்கள் தரப்பில் பாகிஸ்தானை பார்க்கும்பொழுது பாபர் ஆசம், ரிஸ்வான், ஃபகார் ஸமான் என்று எந்த பேட்ஸ்மேன்கள் பற்றியும் பெரிய கவனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஏறக்குறைய பெரும்பான்மையான இந்திய ரசிகர்களுக்கு ஷாகின் ஷா அஃப்ரிடி மீது ஒரு கவனம் இருந்தே தீரும். ஏனென்றால் அவரது பந்து வீச்சால் இந்திய அணிக்கு 2021 டி20 உலக கோப்பையில் பெரிய சேதத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹெண்ட்ரெட் தொடருக்கான வர்ணனைக்கு தினேஷ் கார்த்திக் சென்று இருக்கிறார். இவர் ஏற்கனவே இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் குறித்து தினேஷ் கார்த்திக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.