
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்திய ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை எடுத்த சூழலில் 2ஆஅவது இன்னிங்ஸில் நான் எடுக்கிறேன் என அஸ்வின் செய்துக்காட்டினார். மொத்தமுள்ள 20 விக்கெட்களில் 15 விக்கெட்களை இந்த ஸ்பின் ஜோடி தான் கைப்பற்றியது. குறிப்பாக யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இந்நிலையில் ஷமி குறித்து தினேஷ் கார்த்திக் சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். அதில், “முகமது ஷமி குறித்து ஒரே வார்த்தை சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு "டார்ச்சர்". வாழ்நாளில் வலைபயிற்சிகளில் நான் எதிர்கொண்ட மிகவும் கடினமான பவுலர் என்றால் அது ஷமி தான். வலைகளில் அவரை எதிர்த்து ஆடுவது அந்த அளவிற்கு சிரமம்.