
ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஐபிஎல் குறித்த செய்திகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிற்கு தற்போது 38 வயதாகுகிறது. இந்திய அணிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் கடைசியாக 2022ஆம் ஆண்டும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார்.