
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சென்னை எம்ஏ சிதம்பர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் மற்றொரு நட்சத்திர வீரரான ரிங்கு சிங்கும் காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக ஷிவம் தூபே மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோர் இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்தவகையில் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இவர்கள் இருவரும் இந்திய அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Team India had to make a few changes due to injuries!#INDvENG #ShivamDube #RamandeepSIngh #RinkuSingh #NitishReddy pic.twitter.com/0iVTLOWsP9
— CRICKETNMORE (@cricketnmore) January 25, 2025