
இந்தியாவில் பிரபலமான துலீப் கோப்பை 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதில் பிளே ஆஃப் சுற்றில் அசத்திய வடக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் ஆகிய அணிகள் மோதிய முதல் அரையிறுதி கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டலம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வடக்கு மண்டலம் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 198 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 49 ரன்கள் எடுக்க தெற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக வித்வாத் கவரேப்பா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து தெற்கு மண்டலமும் முடிந்தளவுக்கு போராடியும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 195 ரன்களுக்கு சுருண்டது. தமிழக வீரர் சாய் சுதர்சன் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மயங் அகர்வால் 76 ரன்களும் திலக் வர்மா 46 ரன்களும் எடுக்க மேற்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா, கேப்டன் ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.