
மும்பை இந்தியன்ஸ் அணியில் பல வீரர்கள் விளையாடி இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் வெகுசிலரே. அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி வீரரான பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் அறிமுகமானதிலிருந்து மும்பை அணியில் மட்டுமே விளையாடி வருகிறார்.
பல ஆண்டுகளாக மும்பை அணி பெற்ற சில பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். 14வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக வெற்றிக்கு சாத்தியமே இல்லாத ஒரு போட்டியை தனது அசுர பேட்டிங்கின் மூலம் மும்பை அணிக்கு வெற்றியை தேடித்தந்து, தான் எவ்வளவு அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பொல்லார்ட் எப்படி மும்பை அணிக்கு தேர்வான என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் ட்வைன் பிராவோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.