Advertisement
Advertisement
Advertisement

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ!

நடைபெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.

Advertisement
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 01, 2024 • 10:30 AM

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ. இவர், கடந்த 2004ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு அறிமுகமான நிலையில், இதுநாள் வரை 40 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 5 சதங்கள், 27 அரைசதங்கள் என 7ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் விளாசியுள்ளார். மேற்கொண்டு தனது பந்துவிச்சில் 360 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 01, 2024 • 10:30 AM

அதுமட்டுமில்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில், இரு முறையும் அந்த அணி கோப்பையை வெல்வதற்கு தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் டுவைன் பிராவோ பங்களித்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 161 போட்டிகளில் விளையாடி 1560 ரன்களையும், 183 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

Trending

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு கடைசியாக விளையாடிய டுவைன் பிராவோ தனது சர்வதேச ஓய்வை அறிவித்திருந்த நிலையில், டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வந்தார். மேலும் ஐபிஎல் தொடரிலும் கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்ற அவர், அதன்பின் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். சிபிஎல் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக தற்போது விளையாடிவரும் டுவைன் பிராவோ, இதுநாள் வரை 103 போட்டிகளில் விளையாடி 1155 ரன்களையும், 128 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய டுவைன் பிராவோ, “கரீபியன் மக்களுக்கு முன் என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறேன். என்னுடைய பயணம் தொடங்கிய இடத்திலேயே முடிய உள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இதுவரை நான் விளையாடிய அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இதனையடுத்து ஓய்வை அறிவித்துள்ள டுவைன் பிராவோவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெறும் டி20 தொடர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த டுவைன் பிராவோவின் ஓய்வு முடிவானது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இதன்பின் அவர் பயிற்சியாளராக செயல்படுவார் என்ற எதிர்பார்பிலும் ரசிகர்கள் உள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement