
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்திய ஏ அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சுபியான் முகீம் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணியானது இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றிய பாகிஸ்தானின் சுஃபியான் முகீமின் கொண்டாட்டம் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்படி இந்திய அணியின் பேட்டிங்கின் ஏழாவது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. சுழற்பந்து வீச்சாளர் முகீம் பாகிஸ்தான் தரப்பில் ஏழாவது ஓவரை வீசினார்.