
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதி வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அத்துடன் கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்து வலுவான தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து வங்கதேசத்தையும் வீழ்த்தி அசத்தியது. அதே போல ஆஃப்கானிஸ்தான் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும், பாகிஸ்தானையும் தோற்கடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சாதனைகளை படைத்தது. மேலும் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணி ஆஸ்திரேலியா ஆரம்பகட்ட தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அதன் பின் 4 தொடர் வெற்றிகளை பதிவு செய்து டாப் 4 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
ஆனால் அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்குமென்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியல் 10ஆவது இடத்தை வலுவாக பிடித்துள்ளது. குறிப்பாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்ற அணி பலவீனமான இலங்கையிடமும் 156 ரன்கள் சுருண்டு படுதோல்வி சந்தித்தது.