Advertisement

ENG vs IND, 2nd T20I: இங்கிலாந்து தோல்விக்கான காரணத்தை விளக்கிய ஜோஸ் பட்லர்!

இந்தியாவுடனான டி20 தொடரை இழந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 10, 2022 • 13:58 PM
ENG v IND 2022: “Deserved to lose”, says Jos Buttler after England's series- conceding loss in 2nd T
ENG v IND 2022: “Deserved to lose”, says Jos Buttler after England's series- conceding loss in 2nd T (Image Source: Google)
Advertisement

எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் 49 முதல் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்தது. இதன் மூலம் இந்த டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி தற்போது 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஜடேஜா, ரோஹித், ரிஷப் பந்த் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170 ரன்களை குவித்தது. பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியால் 121 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

Trending


இதன் காரணமாக 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்த இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர்  “இந்த போட்டியில் பெற்ற தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் எந்த இடத்திலுமே நாங்கள் விளையாட நினைத்தபடி விளையாட முடியவில்லை.

இந்த தோல்வி கிடைத்தது எங்களுக்கு சரியான ஒன்றுதான். எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் பேட்டிங்கின் போது பவர் பிளேவில் மூன்று விக்கட்டுகளை இழந்ததால் அதனை ஈடுகட்ட எங்களால் முடியவில்லை. இந்த போட்டியில் அறிமுக வீரரான கிளீசன் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்தது.

அதோடு கிறிஸ் ஜோர்டானும் அருமையாக பந்து வீசினார். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மீது எவ்வித தவறும் இல்லை. இது முற்றிலுமாக நாங்கள் பேட்டிங்கில் செய்த தவறு காரணமாக ஏற்பட்ட தோல்வி தான். பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம். அடுத்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement