ENG vs IND, 3rd Test: 78 ரன்களில் ஆல் அவுட்டான இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் கேஎல் ராகுல், பும்ரா, சமி ஆகியோர் டக் அவுட்டில் வெளியேறினார். அதிகபட்சமாக ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களை எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஒல்லி ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவிற்கு விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் ஹாசீப் ஹமீத் 15 ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ் 3 ரன்களுடனும் களத்திள் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now