
ENG v IND, 4th Test: India Beat England By 157 Runs, Lead Series 2-1 (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களி குவித்தது. இதன் மூலம் 99 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
இதையடுத்து 99 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா சதமடித்தும், புஜாரா, ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தும் அசத்தினார்.