Advertisement

ENG vs IND, 1sy test Day 3 : மழையால் முன்கூட்டிய ஆட்டம் முடிவு!

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 06, 2021 • 23:05 PM
ENG vs IND, 1sy test Day 3 : Persistent rain forces play to be called off in Nottingham
ENG vs IND, 1sy test Day 3 : Persistent rain forces play to be called off in Nottingham (Image Source: Google)
Advertisement

நாட்டிங்ஹாமில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோரின் வேகத்தில் அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல்நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் 9, கே.எல்.ராகுல் 9 ரன்களுடன்  நேற்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினா்.  இதில் ரோஹித் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்த்த நிலையில், ஒல்லி ராபின்சன் வீசிய 38ஆவது ஓவரில் சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அடுத்து வந்த புஜாரா, விராட் கோலி, ரஹானே என மூத்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அட்டமிழந்தனர். 

Trending


அடுத்து ரிஷப் பந்த் களம் புகுந்தாா். பின்னா் மழை காரணமாக நீண்ட நேரம் ஆட்டம் தடைப்பட, 2ஆம் நாள் ஆட்டம் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. அரைசதம் கடந்த ராகுல் 57, ரிஷப் பந்த் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி இன்று தொடர்ந்து விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரிஷப் பந்த் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அணியின் ஸ்கோர் 205 ஆக உயர்ந்தபோது 84 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இங்கிலாந்தை விட, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 95 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய விளையாடி வருகிறது. இதில் 11 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால், மூன்றாம் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  இதனால் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்களைச் சேர்த்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement