
Eng vs Ind, 2nd Test: Deepti Sharma to ring bell at Lord's before start of Day 4 (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி கே.எல்.ராகுலின் சதத்தால் 364 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியிலும் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 180 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 391 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 29 ரன்கள் முன்னிலையும் அந்த அணி பெற்றது.