Advertisement

ENG vs IND, 4th Test, Day 2: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!

4ஆவது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸின் கடைசி நேர அதிரடி அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 03, 2021 • 23:21 PM
Eng vs Ind, 4th Test: Hosts bowled out for 290 in first innings, India trail by 56 runs
Eng vs Ind, 4th Test: Hosts bowled out for 290 in first innings, India trail by 56 runs (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவலில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் விராட் கோலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர்  மட்டுமே அரைசதம் அடித்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ்(5), ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் ஆரம்பத்திலேயே இழந்தது. நல்ல ஃபார்மில் சதங்களை விளாசி கொண்டிருந்த ஜோ ரூட்டை 21 ரன்னில் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். நைட் வாட்ச்மேனாக இறங்கிய ஓவர்டன் ஒரு ரன்னிலும், டேவிட் மலான் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

Trending


இதையடுத்து 62 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. அதன்பின்னர் பேர்ஸ்டோவும், ஒல்லி போப்பும் இணைந்து சிறப்பாக ஆடி 6ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்களை சேர்த்தனர். பேர்ஸ்டோ 37 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஒல்லி போப், 81 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய மொயின் அலி 35 ரன்கள் அடித்தார். 

போப் - மொயின் அலி ஜோடியின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மொயின் 35 ரன்னிலும், ஒல்லி ராபின்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழக்க 255 ரன்களுக்கு 9 விக்கெட் விழுந்தது.

கடைசி விக்கெட்டுக்கு கிறிஸ் வோக்ஸுடன் ஆண்டர்சன் ஜோடி சேர, ஆண்டர்சனை முடிந்தவரை மறுமுனையில் நிறுத்திவிட்டு, அதிரடியாக அடித்து ஆடிய கிறிஸ் வோக்ஸ் பவுண்டரிகளை விளாசி மளமளவென ஸ்கோரை உயர்த்தி அரைசதம் அடித்தார். 84வது ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து, அடுத்த ஓவரில் ஸ்டிரைக்கை தக்கவைப்பதற்காக ரன் ஓடும்போது ரன் அவுட்டானார் கிறிஸ் வோக்ஸ். 

கிறிஸ் வோக்ஸ் சரியாக 50 ரன்னில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களை குவித்து, 99 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

அதன்பின் 99 ரன்கள் பின் தங்கிய 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 20 ரன்களுடனும், ரோஹித் சர்மா 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement