
ENG vs IND, 5th Test: A dominating first session for England ends early as rain arrives (Image Source: Google)
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரிஷப் பந்தின் அதிரடியான சதத்தின் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து 2ஆவது நாளான நேற்று முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.