
India vs England 4th Test: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மான்செஸ்டரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவெ 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேற்கொண்டு இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயின் லெவனில் யார் யார் இடம்பிடிப்பார்கள், இதில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடிப்பாரா, கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு வழக்கப்படுமா போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இப்போட்டிக்கான இந்திய அணியில் நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.