Advertisement

இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan September 20, 2023 • 23:01 PM
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது! (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்துக்கு சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இங்கிலாந்து-அயர்லாந்து இடையேயான ஒரு நாள் இன்று முதல் தொடங்கியது. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இங்கிலாந்து விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். ஆனால் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களில் யாரும் அயர்லாந்து தொடருக்கு தேர்வாகவில்லை.

கடைசி நேரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் தன்னை அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அணியில் அவர் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சொதப்பிய ஜோ ரூட் இழந்த பார்மை மீட்க இந்த ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார். மேலும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜாக் கிரௌலி செயல்படுகிறார்.

Trending


அயர்லாந்து அணி பால் ஸ்டிர்லிங் தலைமையில் களம் இறங்குகிறது. ஆன்டி பால்பிர்னி, கர்டிஸ் கேம்ப்பெர், ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அதிர் என்று திறமையான வீரர்கள் அணிவகுத்து நிற்பதால் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி லீட்ஸிலுள்ள ஹெட்டிங்லேவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போட்டியின் டாஸ் போடுவதற்கு முன்னதாக மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின்னும் மழை தொடர்ந்த காரணத்தால் இப்போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெறுகிறது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement