
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணி வீரர்களை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை லீட்ஸீன் ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் பாகிஸ்தான் அணி வீரர் ஷதாப் கான் புதிய மைல் கல் ஒன்றை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுவரை பாகிஸ்தான் அணிகாக 98 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷதாப் கான் 107 விக்கெட்டுகளை கைப்பற்றியு, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ஒன்பதாம் இடத்தில் நீடித்து வருகிறார்.