
England players unlikely to be involved in rescheduled IPL 2021 (Image Source: Google)
கரோனா சூழல் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு, ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடர் நடைபெற்றது.
இந்நிலையில் பயோ பபுள் சூழலில் இருந்த சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவிருந்த நிலையில், 29 ஆட்டங்களுடனே ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள் இந்த வருடம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடத்தப்படும் என பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வருகின்றன. ஒருவேளை இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றாலும் அதில் இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்வது தற்போது கேள்விகுறியாகியுள்ளது.