ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி இன்று அறிவிப்பு - தகவல்!
ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் நிலையில் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒரு முறை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையடி வருகிறது. இந்த தொடரை கைப்பற்றுவது இரு நாடுகளுக்கும் கவுரவ பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் எப்போதுமே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டின் ஆஷஸ் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இங்கிலாந்து அணி தேர்வு குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தது.
இந்த நிலையில் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அணியில் 17 முதல் 18 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ‘ஆஷஸ் தொடருக்கான அணியை தேர்வு செய்ய இன்று ஆலோசனை நடத்துகிறோம். தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. வரும் நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் ஆஷஸ் தொடருக்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்க வேண்டும்.
Win Big, Make Your Cricket Tales Now